திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை, நாளை முதல்முறையாக கூடுகிறது.
தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் பல்வேறு துறை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சட்டப்பேரவை தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில், ஆளுநர் உரையுடன் நாளைத் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, சட்டப்பேரவைக்கு வரும் அனைத்து எம்.எல்.ஏக்கள், அலுவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.