திருப்பூரில் இன்று திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

திருப்​பூரில் இன்று தி​முக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடை​பெறுகிறது. 

திருப்​பூர் மாவட்​டம் பல்​லடத்​தில் இன்று (டிச. 29) தி​முக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடை​பெறுகிறது. இந்த மாநாடு ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ என்ற தலைப்பில் இன்று (டிச.29) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதில் பங்​கேற்​ப​தற்​காக முதல்மைச்சர் மு.க.ஸ்டா​லின் இன்று காலை 11 மணிக்கு சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் கோவை வரு​கிறார். விமான நிலை​யத்​தில் அவருக்கு கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் உற்​சாக வரவேற்பு அளிக்​கின்​றனர். அங்​கிருந்து சின்​னி​யம்​பாளை​யத்​தில் உள்ள நட்​சத்​திர ஹோட்​டலில் சிறிது நேரம் ஓய்​வெடுக்​கும் முதலமைச்சர், மாலை 4 மணிக்கு கார் மூலம் பல்​லடம் செல்​கிறார். மாநாடு முடிந்த பின்​னர் இரவு கோவை விமான நிலை​யத்​துக்கு வந்​து,               சென்​னைக்குப் புறப்​பட்​டுச் செல்​கிறார்.

இந்த மாநாட்டில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதில், 234 சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் சுமார் 2 லட்சம் பெண்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மகளிரணி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 2,200-க்​கும் மேற்​பட்ட போலீசார் பாது​காப்​புப் பணி​யில் ஈடுபட உள்​ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.