தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. ஆதரவளித்த கட்சிகளான விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் உட்பட 35 அமைச்சர்கள் உள்ளனர். மேலும் வளர்ச்சி பணிகளுக்காக மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழ் நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டம் தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டமாகும்.
இக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, பட்ஜெட் தாக்கல், ஆளுநர் உரை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல, மேகேதாது அணை விவகாரம், டாஸ்மாக் கடை மூடல், பயிர்க்கடன் தள்ளுபடி ஆகியவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.




