அடுத்தடுத்த மாற்றங்கள் – இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

நேற்று 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ்…

நேற்று 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இன்றும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு அண்மை காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.  அதன் தொடர்ச்சியாக இன்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

1. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

2. பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

3. சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

4. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை சரி செய்யக் கோரி, சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.