கச்சத்தீவு அருகே மீன்பிடித்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதில், மண்டபம் அஜ்மல்
என்பவரது விசைப்படகில் படகோட்டி புல்லாணி, மீனவர்கள் மனோகரன், மலைக் கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோர் கச்சத் தீவு அருகே இன்று காலை மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் வந்த 5 பேர் அஜ்மல் விசைப்படகின் முகப்பில் மோதினர். இதில் படகு சேதமானது. படகில் இருந்த மீனவர் மனோகரனின் தலையில் சிறு கட்டையால் தாக்கினர்.
இதனையும் படியுங்கள்:ஏஎஸ்பி பல்வீர் சிங் தாக்கியதில் கல்லீரல் பாதிப்பு – பாதிக்கப்பட்டவர் பரபரப்பு குற்றசாட்டு
மீனவர்களை பிடித்து வந்த 30 கிலோ இறால், 25 கிலோ நண்டு, மீனவர் மனோகரன் வைத்திருந்த ரூ.1,350 ஆகியவற்றை பறித்துச் சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த சக மீனவர்கள் அஜ்மல் படகை கரை சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய உளவு படையினர் விசாரித்தனர்.
இதில், அஜ்மல் என்பவரின் விசைப்படகு சேதமான நிலையில், படகில் இருந்த மீன்கள் மற்றும் பணத்தை இலங்கை கடற்படையினர் பறித்து சென்றதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.