26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தாமிரபரணி – நம்பியாறு- கருமேனியாறு இணைப்புத் திட்ட 80% பணிகள் நிறைவு: சபாநாயகர் அப்பாவு தகவல்

தாமிரபரணி -நம்பியாறு -கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த ஆறுகள் இணைப்பு திட்டத்தின் நான்காம் கட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி, பெருமாள் நகர், முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகளில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 2008-09 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தி யுள்ளதாகவும் தெரிவித்தார். நான்காம் கட்ட பணிகளில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே பாலமும் ரயில்வே பாலமும் அமைக்கப்பட இருப்பதாகவும் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டத்தின் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெற்று விவசாயிகள் பயன்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை, ரயில்வேதுறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பர்மா இந்தியர்கள் வீட்டு வசதி சங்க நிலம் ஆக்கிரமிப்பு- 6 மாத அவகாசம் அளித்து அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor

17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலை சந்திப்போம்! – பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்!

Web Editor

பிரதமர் மோடி அனைத்து துறைகளையும் குழப்பிவிட்டார்! டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்!

Web Editor