29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் புகார்: விசாரணை நவம்பா் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மல்யுத்த வீராங்கணைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் வழக்கில், இருதரப்பினரும் அடுத்தகட்ட வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், விசாரணையை நவம்பா் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பியும், பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் பிரிஜ் பூஷன் மீது 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவர் உட்பட 7 வீராங்கனைகள் பாலியில் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடியாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் மழுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் வீரர்களின் ஆதரவளித்தன.

இதனையடுத்து, பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலையில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கியதோடு, அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று தடை விதித்தது. மேலும் புகார் தெரிவித்தவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டக் கூடாது எனவும் மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் தெரிவித்தார்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சட்டத்துக்கு உட்பட்டு மேற்பார்வைக் குழு நியமிக்கப்படவில்லை. ஆகையால் இந்த வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷண் சிங்கை விடுவிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபா் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரிஜ் பூஷண் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், டோக்யோ, மங்கோலியா, பல்கேரியா, ஜகாா்த்தா, கஜகஸ்தான், துருக்கி என வெளிநாடுகளில் நடைபெற்றதாக கூறப்படும் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் சம்பந்தப்பட்ட புகாரை விசாரிக்க டெல்லி நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘நேரம் காலமின்றி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டனர். ஆகையால், இதில் இடம், காலம் எல்லாம் பொருட்டல்ல’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, இருதரப்பினரும் அடுத்தகட்ட வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், விசாரணையை நவம்பா் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading