குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும்: செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இந்நிலையில்,…

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இந்நிலையில், மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம், கூடல்நகர், கூடல்புதூர், விளாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபட்டார்.

அப்போது, அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடையே பேசிய அவர், தன்னை இரண்டு முறை தேர்வு செய்த மதுரை மக்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்க முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.