கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலையும் லஞ்சத்தையும் எப்படி ஒழிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் தலைமை மாறுவது முக்கியம் அல்ல, தத்துவம் மாற வேண்டும் எனக் கூறினார்.
கொசுவையே ஒழிக்க முடியாதவர்கள் ஊழலையும் லஞ்சத்தையும் எப்படி ஒழிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பிய சீமான், ஊழலுக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் எனப் பேசினார். கூட்டணியில்லாமல் மக்களை மட்டுமே நம்பி களமிறங்கிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி எனவும் சீமான் தனது பரப்புரையில் தெரிவித்தார்.
Advertisement: