நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சாலையை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு – கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி அமைந்துள்ளது. கூடலூரில் இருந்து தொரப்பள்ளி வழியாக மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று, யாரையும், எதையும் பற்றியும் பொருட்படுத்தாமல் சாலையில் உலா வந்து கொண்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுமார் ஒரு மணி நேரம் சாலையின் நடுவே உலா வந்த இந்த ஒற்றை காட்டுயானையால் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணி வகுத்து நின்றது. மேலும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பு சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த யானை விரட்டும் குழுவினர், காட்டு யானையை வனப்பகுதிகள் விரட்டினர். இதன் பிறகு வழக்கம்போல் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
- பி.ஜேம்ஸ் லிசா