முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்- முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் பள்ளி
கல்வித்துறையின் சார்பில் புதிய கட்டமைப்பு வசதிகளை பள்ளி கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கான 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்புகளை வெளியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பகுத்தறிவோடு சிந்திக்க கல்வியறிவு மிகவும் முக்கியம். கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் நீதி கட்சி காலம் முதல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதையும் படிக்கவும்: பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் போராட்டம்- உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

பள்ளி முடிக்கும் அனைத்து மாணவர்களும் தவறாமல் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும்.
அதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது. காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண்
திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்ளிட்டவை
சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறினார். மாணவர்களின் படிப்புத் திறனுடன் படைப்புத்திறனும் சேர்ந்து வளர்ந்திட வேண்டும் என்பதே அரசினுடைய நோக்கம். 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக்
கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். மேலும் உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என தெரிவித்தார்.

இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என காணொளி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய பிறந்த நாளில் ஆசிரியர்களுக்கு திட்டங்களை அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பதவியேற்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!

G SaravanaKumar

மாண்டஸ் சீற்றம்: சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

Web Editor