பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.…

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு பதிவுத் துறையில் வருவாய் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகவரித் துறையில் கடந்த ஆண்டை விட ரூ.8,760.83 கோடி கூடுதலாக, அதாவது ரூ.1,04,970.06 கோடி வருவாயாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வணிகவரித்துறையில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மறுசீரமைப்பு, தீவிர கண்காணிப்பு மற்றும் வணிகர்களுடனான கனிவான அணுகு முறையின் விளைவாகவே இது சாத்தியமானதாகவும், பதிவுத் துறையிலும் அரசின் வருவாய் முந்தைய ஆண்டை விட ரூ.3,270.57 கோடி அதிகரித்து, 2021-22-ம் ஆண்டில் ரூ.13,913.65 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பதிவுத் தவறுகளும், ஆவணப் பதிவுகளும் அதிகமாக இருந்த பதிவுத் துறையில் வருவாயைப் பெருக்குவது சாத்தியமா என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், திமுக அரசால் நடைமுறைப் படுத்தப்பட்ட பல்வேறு அறிவு சார்ந்த செயல் திட்டங்களின் காரணமாக பதிவுத்துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு வருவாய் அதிகமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.