சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று தங்கத்தில் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.44,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.5,585-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.45,280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 5,660 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி ஒரு கிலோ நேற்று ரூ.77,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலையில் எவ்வித மாற்றமும் இன்றி, அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது.
இதையும் படியுங்கள் : பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!
ஒரு சவரன் தங்கம் இன்று 45 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான போர் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.








