மழைநீர் வடிகால் பணிகள்; 2வது நாளாக தலைமை செயலாளர் ஆய்வு

சென்னை பள்ளிகரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை நேற்று துவங்கிய நிலையில் சென்னை…

சென்னை பள்ளிகரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும்
மழைநீர் வடிகால் பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவ மழை நேற்று துவங்கிய நிலையில் சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிகரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்ட மழைநீரால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் அகல மூடுகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமை செயலாளர் இறையன்பு மீண்டும் இந்த பகுதிகளை மூன்றாவது முறையாக நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.


தலைமை செயலாளர் இறையன்பு இன்று பள்ளிகரணை, மடிப்பாக்கம் மற்றும் வேளச்சேரி
ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நடைபெற்று வரும் அகல மூடுகால்வாய்
பணிகளை ஆய்வு மேற்கொண்டு கால்வாய்கள் அமையும் இடத்தை வரைப்படம் மூலம் பார்த்து அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் கக்கன் தீப் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.