பொன்னமராவதி மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர்வற்றும் விவசாய கண்மாய்களில் ஜாதி,மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மீன்பிடித் திருவிழா நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி அருகே உள்ள தேரடிமலம்பட்டி கிராமத்தில் உள்ள மலைகண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் உள்ள நடுமடை அய்யனார் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்த நிலையில் ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்கை கொண்டு போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா