புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதான அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மிஷன் வீதியில் உள்ள அரசு மகளிர் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு அமோக வரவேற்பு உள்ளதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோன்று, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார். புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07% வாக்குப்பதிவு பதிவாகிவுள்ளது.