சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை அகற்று பணிகளில் குடியிருப்புகளை அகற்றுவதற்கு முறையாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கடந்த மாதம் வழங்கப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் காலி செய்ய மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்னும் சில நாட்களில் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என மீண்டும் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ வழங்கப்பட்டது. இந்நிலையில் தாங்கள் காலி செய்ய மாட்டோம் என அப்பகுதி மக்கள் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.