32.2 C
Chennai
June 26, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

முதல்முறையாக தேர்தல் களத்தில் கால் பதிக்கும் பிரியங்கா காந்தி – வயநாடு தொகுதியில் போட்டி!

மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல்காந்தி, வயநாடு தொகுதியை ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 தொகுதிகளில் வென்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவரால் ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது. ஒரு தொகுதியை மட்டுமே ஒரு நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதே இதன் விதியாகும்.

இந்நிலையில், நாளையுடன் முடிவெடுப்பதற்கான இறுதி நாள் என்பதால் இன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும், ரேபரேலியில் எம்பியாக தொடர்வதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா காந்தி:

12 ஜனவரி 1972 அன்று ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அவர்களின் இரண்டு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தவர் பிரியங்கா காந்தி. பிரியங்கா காந்தி 1984-ம் ஆண்டு வரை டேராடூனில் உள்ள வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் , டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 2010 இல் பௌத்த ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார் .

1997-ம் ஆண்டில், பிரியங்கா காந்தி டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான ராபர்ட் வத்ராவை மணந்தார். பிரியங்கா காந்தி வத்ரா என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். ராகுல் அரசியலுக்கு வருவதற்கும் முன்பாக தாய் சோனியா காந்திக்காக தேர்தல் பிரசாரம் செய்து வந்தவர் பிரியங்கா. இவர் உ.பி-யில் ஒவ்வொரு முறை தேர்தல்களிலும் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. கடைசியாக, 2019 மக்களவை தேர்தலில் பிரியங்கா, வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்ப்பார் என்று கூறப்பட்டது.

ஏனெனில், அப்போது பிரியங்கா அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இணைந்து அரசியலில் நுழைந்தார். 2019-ம் ஆண்டு பிரியங்கா காந்தி அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இதுவும் நடைபெறாத நிலையில் அடுத்து வந்த 2022 உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவதாகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் இல்லை என்றானது. அதேபோல், 2024 மக்களவை தேர்தலிலும் பிரியங்காவின் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மக்களவைத் தேர்தலிலும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை.

தற்போது ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி இடைதேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதனால் முதன்முறையாக பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட்டு தீவிர அரசியலுக்குள் நுழைய இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading