நாசிக்கில் உள்ள காலா ராம் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காலா ராம் கோயில் சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தை தண்ணீரை கொண்டு தூய்மை செய்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிரதமர் மோடி, கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு…

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காலா ராம் கோயில் சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தை தண்ணீரை கொண்டு தூய்மை செய்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிரதமர் மோடி, கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு செய்தார். பின்னர், பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்.

முன்னதாக பிரதமர் மோடி காலா ராம் கோயில் வளாகத்தில் தண்ணீர் வாளியை தானே தூக்கி சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளுமாறு அனைவருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.