பேரறிவாளனின் ஜாமீன் ஆறுதலை தருகிறது; வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் வசிக்கும்…

30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் வசிக்கும் பகுதியில் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட உச்சநீதிமன்றம் நிபந்தை விதித்து, வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தது. மேலும் அளிக்கப்பட்டுள்ள ஜாமீனானது இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யாதவர். ராஜீவ்காந்தி படுகொலைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எந்தக் குற்றமும் செய்யாமல், முப்பதாண்டுகள் இளமை வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது. தொடக்க காலத்தில் அவர் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டார். அவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு இருந்தார் என்று பேசியதுடன், பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான அதிகபட்சக் குற்றச்சாட்டு. கடைசியில் உண்மை வெளிவந்தும் பயன் ஒன்றும் இல்லை என்று உருக்கமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, இழந்த முப்பதாண்டுகளைத் திரும்பப் பெற முடியுமா? இழந்த முப்பதாண்டுகளைப் பெறுவதற்கு பேரறிவாளனுக்கு வாய்ப்பு உண்டா?, இல்லையே?. நீதி சாகடிக்கப்பட்டு நீண்டகாலம் ஆயிற்று. இப்பொழுது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. இந்தப் ஜாமீன் விடுதலை அவரது தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருக்கும் என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.