345 ரூபாய் கருவியை கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 49 வது நினைவு தினத்தையொட்டி, கோவை காந்திபுரம், பெரியார்
படிப்பகத்தில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர்
செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ் மண் என்பது திராவிட மண், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முப்பெரும் தலைவர்களின் உருவமாக முதல்வர் உள்ளார் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் வழி நடத்தி வருவதாக கூரினார்.
தனியார் பள்ளிகளில் மாணவர் குறிப்பேட்டில் சாதி குறிப்பிடுவதற்கு கல்வி அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். பாஜக தமிழகத்தில் எங்கு உள்ளது. எத்தனை பேர் உள்ளனர். எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்பது தெரியாத கட்சி பாஜக. 37 வயதில் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளதாக பொய் சொல்வதாகவும், 345 ரூபாய் கருவியை கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு
உயர்ந்துள்ளது சாமானிய மக்களின் நிலைமை என்ன என்பது குறித்து பாஜகவிடம் கேட்க
வேண்டும். கேஸ் மானியம் ஒரு பைசா கூட வருவதில்லை. இப்படிப்பட்ட சூழலில் சிறந்த ஆட்சி நடத்தும் தமிழகத்திற்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் சமூக வலைதளத்தை பாஜகவினர் பயன்படுத்துவதாக என்றும் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டில் பாஜக ஜெயித்தது, பாஜகவுக்கு எவ்வளவு ஓட்டு வங்கி முதலில் உள்ளது, எவ்வளவு உறுப்பினர் என்பதை கேட்டு சொல்லுங்கள், அதை வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம் என விமர்சித்தவர், 234 தொகுதியின் தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு
திட்டங்களை முதல்வர் வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.

நாளை முதல்வர் நல்லாசியோடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி விழா பேருரை ஆற்ற
உள்ளதாகவும், நேரு விளையாட்டு மைதானத்தில் அடிக்கல் நாட்டிய பின்னர் துறை
சார்ந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தவர்,
சிங்காநல்லூர் எஸ். ஐ .எச் .எஸ்., காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு 29 கோடி நிதியை ஒன்னரை ஆண்டுகளில் முதல்வர் வழங்கியுள்ளதாகவும், விரைவில் பாலப்பணி கொண்டு வரப்படும் என்றவர், கடந்த அதிமுக ஆட்சியில் இந்தப் பாலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என குற்றச்சாட்டினார்.







