திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் பூமிக்கடியில் கிடைத்த முருகன் சிலையை எடுத்துச் செல்ல கூடாது என்று, வருவாய் துறையினரை கிராம மக்கள் திருப்பி அனுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள நத்தம் கிராமத்தில் பாழடைந்த
மண்டபத்தில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள்
திருத்தணி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்துள்ளனர்.இந்த மண்டபத்தில் அவர்கள் பூஜை செய்து அமர்ந்திருக்கும் பொழுது நத்தம் கிராமத்தைச் சார்ந்த இளைஞர் சந்திர பாபு இவருக்கு சாமி திடீரென்று வந்து அருள்வாக்கு கூறியுள்ளார்.அப்பொழுது இந்த மண்டபத்தின் பின்புறம் முருகர் சிலை பூமிக்கு அடியில் உள்ளது இதனை வெளியில் எடுத்து பூஜை செய்யுங்கள் உங்கள் கிராமத்தில் நன்மை நடக்கும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு இந்த சிலையை வெளியே எடுக்கும் பொழுது 2 அடிக்கு மேல் உள்ள இந்த முருகர் சிலை வெளியில் எடுத்து அந்த
மண்டபத்தில் வைத்து பால் அபிஷேகம் செய்து அவருக்கு புத்தாடை அணிவித்து மாலை அணிவித்து பூஜைகள் செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை கேள்விப்பட்ட திருத்தணி வருவாய் துறை அதிகாரிகள் இந்த சிலையை மீட்டு செல்வதற்காக வந்தனர். ஆனால் கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இந்த சிலையை முருகர் சிலையை மீட்டு செல்லக்கூடாது இந்த முருகர் சிலை வைத்து எங்கள் கிராமத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கூறியதால் பூமிக்கு அடியில் கிடைத்த முருகர் சிலையை எடுத்து செல்லாமல் வெறும் கையுடன் திருத்தணி வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.
ரூபி.காமராஜ்