டிடிவி தினகரனுடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல், 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் இரவு பகல் பாராமல் மதுவிற்பனை நடைபெற்று வருவதை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை 11 மணியளவில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி நடைபெற உள்ளது.
2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த மதுவிலக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க உள்ளோம். இந்த பேரணியில் பங்கேற்பதற்கு திமுக-வை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுத்துள்ளோம்.
டிடிவி தினகரனுடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஆனால் அவர் பத்திரிகையாளர்களை நேரடியாக அழைத்து, அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதில்லை”.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.