நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறைக்குs சொந்தமான பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500 க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 13-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க, நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காக்களைத் தயார் படுத்தும் பணியில், நிரந்தர மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் என 500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலியாக 400 ரூபாய் மட்டுமே பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தாவரவியல் பூங்காவில் 13-வது நாளாக உள்ளிருப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.