34.5 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

NCL 2023: 38 ரன்கள் வித்தியாசத்தில் கரூர் சேரன் கல்லூரியை வீழ்த்தி கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி அபார வெற்றி

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடரில் 38 ரன்கள் வித்தியாசத்தில் கரூர் சேரன் கல்லூரியை வீழ்த்தி கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி அபார வெற்றி பெற்றுள்ளது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சார்பில் திருச்சி மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்றது.

முதல் சுற்றில் கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி திருச்செங்கோடு மற்றும் கரூர் சேரன் காலேஜ் ஆகிய அணிகள் களம் காண இறங்கின. அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன் முன்னிலையில் முதல் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. கரூர் சேரன் கல்லூரி டாஸ் வென்று பில்டிங்கை தேர்வு செய்துள்ளது .

முதலில் களம் இறங்கிய கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராபின் குமார் 4 ஃபோர் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 47 பந்துகளில் 75 ரன்கள் விலாசினார் . அனவோன்கேர் – 8 பந்துகளில் 12 ரன்களும், தனஜெயன் 11 பந்துகளில் 16 ரன்களும், தீபன் 21 பந்துகளில் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கரூர் சேரன் கல்லூரி  அணி வீரர்  தினேஷ் 4 ஓவர்கள் பந்துவீசி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்ததாக 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  சேரன் கரூர் கல்லூரி அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்த அணியில் அதிகபட்சமாக விடுதலைச் செல்வன் 33 பந்துகளில் 34 ரன்களும், ராஜேஷ் 20 பந்துகளில் 12 ரன்களும், ஜோஸ் 7 பந்துகளில் 12 ரன்களும், தினேஷ் 21 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி சார்பில் ராகேஷ் மற்றும் அருண் தலா இரண்டு விக்கெட்களையும் மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனை அடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி திருச்செங்கோடு அணி வெற்றி பெற்றது. இந்த அணியிl  47 பந்துகளில் 75 ரன்களை குவித்த ராபின் குமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading