34.5 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

NCL 2023: தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ உ சி கல்லூரியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிரான்சிஸ் சேவியர் கல்லூரி அசத்தல் வெற்றி

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரி அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வெற்றி பெற்றது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக நெல்லை மண்டலம் சார்பாக  திருநெல்வேலி மாவட்டம்  சேரன்மகாதேவி ஸ்கார்ட் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இப்போட்டிகள்  நடைபெற்ற வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐந்தாவது நாளான இன்று காலை நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணியும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரி அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற அண்ணா பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களம் கண்ட பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் விமல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக  நின்று ஆடி அணியின் ரன் எண்ணிக்கையை  வெகுவாக உயர்த்தினர்.  இந்த நிலையில் அணியின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்த போது 35 ரன்கள் எடுத்திருந்த ராகுல் பென்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து  அணியின் கேப்டன் மாரீசன் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து  வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர் விமலுடன் பாரதி ராம் இணைந்து சிறிது நேரம் களம் ஆடினர். அணியின் ஸ்கோர் 136 ஆக இருந்த  போது தொடக்க ஆட்டக்காரரான விமல் சாம் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். விமல் 46 பந்துகளில் ஒன்பது பவுண்டரி, மூன்று சிக்சர் உட்பட 67 ரன்களை விளாசினார்.

பிரான்சஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்த வரையில் அண்ணா பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரி அணியின் சார்பில் பென்ஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 31 ரன்கள்  கொடுத்து மூன்று விக்கெட்டுகளையும் சிவசரபோஜி நான்கு ஓவர்கள் பந்துவீசி 24 ரங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதனை அடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ உ சி பொறியியல் கல்லூரி அணி தொடக்க ஆட்டக்காரர்களாக சுபாகர் மற்றும் பாரத் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் சுதாகர் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை மாரிசன் பந்துவீச்சில் இழந்தார். அதேபோன்று மற்றொரு தொடக்க கட்டக்கார பாரத் ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் முத்து பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அடுத்தடுத்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால்  அண்ணா பல்கலைக்கழக தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன் மூலம் பிரான்ஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரான்சஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணியின் சார்பில் கணேஷ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்களை கொடுத்து நான்கு விக்கெட்டுகளை எடுத்தார் அதை போன்று விமல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 11 ரன்களை மட்டும் கொடுத்து இரண்டு விக்கெட் களை வீழ்த்தினார். பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அணி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றி இருக்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் குவித்ததுடன் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றிய ரன் குவித்த பிரான்சி சேவியர் பொறியியல் கல்லூரி அணியின் தொடக்க ஆட்டக்காரரான விமல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading