முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும், அது உடைந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்று கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரள அரசுக்கு இடையே 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பிரச்னையாக முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இருந்துவருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுக்காப்பாக இல்லை. இந்த அணை உடைந்தால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்ற பல சமர்ப்பிக்குளை இன்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசின் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு அரசு இடையே உள்ள சிக்கல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் இன்றைய உச்சநீதிமன்ற அமர்வின் போது நீதிபதி கான்வில்கர் மற்றும் அபே ஒகா ஆகியோர் முன்னிலையில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல கூறுகளை கேரள வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.
முல்லைபெரியாறு அணை பிரச்னை இரு மாநிலத்திற்கு இடையேயான தண்ணீர் பிரச்னை இல்லை. இது கேரள மக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடும் கேரள அரசு, அணை பலமாக இல்லாத காரணத்தால் இப்போது இருக்கும் அணையின் அடிவாரத்தில் புதிய அணையை கட்டித்தருவதாகவும் தெரிவித்துவருகிறது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளையும் தொடர்கிறது.
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் அபிடேவிட் தாக்கல் செய்த கேரள அரசு, அணையின் பலம் குறித்து தகுந்த சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி சோதனை மேற்கொள்ளும் குழுவில் கேரள அரசை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற வேண்டும். சுதந்திரமான பொறியாளர்களை கொண்டு அணையின் பாதுக்காப்பு கட்டமைப்பு, நீர் கசிவு, புவியியல் மற்றும் நீரியல் தொடர்பாக முழு ஆய்வு செய்து அணையின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும். ஆய்வின் முடிவுகள் தங்களது அரசுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கேரள அரசு அணை பாதுகாப்பு குறித்து வாதாடும் நிலையில், அணையை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.