தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முன்பு, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிற்பகல் 2 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சு மாண்டவியாவை சந்திக்கவுள்ளதாகக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சந்திப்பின்போது 11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை உடனே தொடங்கப்பட வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்க அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சித்தா பல்கலைக்கழகம் அமைவது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.