“அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை” – ஆதவ் ஆர்ஜுணா

அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை பொதுப்பணி, நீர்வளம், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட 27 துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், இன்று சமூகநீதித் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.

முன்னதாக கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அப்போது மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லதா, கீழ்வேளூர் தொகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை நகரத்திற்கு நுழைவு வாயிலாக இருக்கக்கூடிய மூன்று முக்கிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தரும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுணா, அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் இல்லாமல் இருப்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசும் தயாராக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் வந்த பிறகு அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இந்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுணா, நமது மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்குள் வரும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து மத்திய அமைச்சருடன் விரிவாக விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.