மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி, தமிழ்நாட்டின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 100 கோடி ரூபாய் செலவில், மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு, ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளுக்கு ஊதியம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக, 8 கோடியே 28 லட்சம் ரூபாய், நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







