தமிழகத்தின் 38வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகியுள்ளது. 30 ஆண்டுக்கும் மேலாக மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் கடந்த மார்ச்…

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகியுள்ளது.

30 ஆண்டுக்கும் மேலாக மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி சட்டசபையில் தமிழக அரசு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக 8 மாதத்திற்கும் மேலாக மக்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

சட்டசபையில் அறிவிக்கப்பட்டும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தனி மாவட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகியுள்ளது. புதிய மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக மக்கள் வைத்த கோரிக்கை நிறைவேறும் இந்நாள் இப்பகுதி மக்களின் பொன்னாள் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply