36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

சந்தேகம்: மனைவியை உயிரிழப்புக்கு தூண்டி தூக்கில் தொங்கியதை வீடியோ எடுத்த கொடூரக் கணவன்

சந்தேகம் காரணமாக, மனைவியை உயிரிழப்புக்குத் தூண்டி, அவர் தூக்கில் தொங்குவதை வீடியோவாக எடுத்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் அட்மகுரு என்ற பகுதியை சேர்ந்தவர் பெஞ்சலய்யா (38). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கொண்டம்மா (30) என்பவருக்கும் 13 வருடங் களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஏடிஎம்-மில் காவலாளியாக பணியாற்றும் பெஞ்சலய்யாவுக்கு, தன் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்களாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட சண்டையில், தான் உயிரை மாய்த்துக்  கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் கொண்டம்மா. செத்துத் தொலை என்று அவரை உயிரிழப்புக்கு தூண்டினார் அவர். உடனடியாக ஃபேனில் துணியை கட்டி தொங்கத் தொடங்கினார் கொண்டம்மா. கணவர் தடுப்பார் என்று எதிர்பார்த்தார். ஆனால், ’நீ உயிரிழப்புசெய்தால் தடுக்க மாட்டேன். அதை வீடியோ எடுத்து உன் வீட்டுக்கு அனுப்புவேன்’ என்றார்.

அடுத்த சில நொடிகளிலேயே தூக்கில் தொங்கி, துடி துடித்து உயிரிழந்தார் கொண்டம்மா. அதை வீடியோ எடுத்த பெஞ்சலய்யா, அவருடைய பெற்றோருக்கு அனுப்பி வைத்தார். அதிர்ச்சி அடைந்த அவர் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் பெஞ்சலய்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி தற் கொலை செய்வதை கணவனே வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading