முட்டைக் குழம்புக்காக பெண்ணை கொலை செய்த லிவ்-இன் துணை!

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில்,  முட்டைக் குழம்பு  சமைத்து கொடுக்காததால்,  தனது லிவ்-இன் துணையை கொலை செய்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.   குர்கானில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு…

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில்,  முட்டைக் குழம்பு  சமைத்து கொடுக்காததால்,  தனது லிவ்-இன் துணையை கொலை செய்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

குர்கானில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் 32 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.  இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் போலீஸ்க்கு தகவல் அளித்துள்ளார்.  தகவலின்பேரில் அங்குவந்த போலீசார் முகத்தில் காயங்களுடன் இருந்த சடலத்தை மீட்டு விசாரணையை மேற்கொண்டனர். இதனையடுத்து கொலை வழக்கு பதிந்த போலீசார் அங்கு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளர்களிடம் விசாரித்துள்ளனர்.  அதில், இறந்த பெண் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஞ்சலி என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த பெண்ணின் கடந்த காலத்தை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.  விசாரணையில் லல்லன் யாதவ் (35) என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பாம்பு கடித்து இறந்ததும்,  குடும்பத்துடன் சண்டையிட்டு கொண்டு டெல்லி வந்துள்ளார்.  இந்நிலையில் ஆறு, ஏழு மாதங்களுக்கு முன்பு இவர் அஞ்சலியை சந்தித்துள்ளார்.  இருவரும் பழகிய நிலையில்,  ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.  கூலி வேலை செய்து வந்த இருவரும் குர்காலனுக்கு வந்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இருவரும் வீடு இல்லாமல் அங்கேயே வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளின் குடிபோதையில் இருந்த யாதவ்,  அஞ்சலியிடம் முட்டைக் குழம்பு சமைக்க சொல்லியுள்ளார்.  ஆனால் அஞ்சலி அதற்கு மறுத்ததாக தெரிகிறது.  இதனால் கோபமடைந்த யாதவ்,  அஞ்சலியை இரும்பு கம்பி மற்றும் பெல்டால் அடித்து,  கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.  இதனையடுத்து போலீசிடம் இருந்து தப்புவதற்காக அந்த இடத்திலிருந்து ஓடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.