குற்றம்செய்திகள்

கேரளாவில் ரயில் மூலம் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல்

கேரளாவில் ரயிலில் கடத்தப்பட்ட 27 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு வைத்து கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் ஆலுவா ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளை சோதனை செய்த போது ஓடிசாவை சேர்ந்த ரஜினிகாந்த் மாலிக், சர்மெந்தா பிரதான் மற்றும் செக்டலா பிரதான் ஆகியோர் கொண்டு வந்த டிராலியை சோதனை செய்த போது அதில் 27 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்களை ஆலுவா ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அந்த கும்பல் கஞ்சாவை டிராலி பைகளில் சிறிய பொட்டலாங்களாக கட்டி வைத்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் கருவாடு மற்றும் உலர் இறால்களை டிராலியை சுற்றி வைத்து கஞ்சாவை கடத்தி வந்ததுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் இருந்து வரும் ரயில்களில் சோதனை கடுமையாக இருந்ததால், சென்னை வந்து அங்கிருந்து கேரளாவிற்கு ரயிலில் வந்துள்ளனர். கைது செய்த மூவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கோவையில் “மாட்டிறைச்சி சாப்பிடுவியா?” எனக் கேட்டு மாணவியை ஆசிரியர் தண்டித்த விவகாரம்! விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்கப்பட உள்ளது!!

Web Editor

குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!

Web Editor

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நாளை ஆலோசனை! 

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading