முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

டப்பிங் ஆர்டிஎஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதா ரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக சேர்ந்து சினிமா டப்பிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21ம் அன்று நடைபெற்ற சங்கத்தின் 35வது ஆண்டு பேரவை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது டப்பிங் யூனியனின் உறுப்பினராக உள்ள சங்கீதா என்ற பெண்ணை டப்பிங் யூனியன் பொதுக்குழு கூட்டத்தில் பெண் என்றும் பாராமல் ஆபாசமாக பேசி தாக்கி காயப்படுத்தியதாக நடிகர் ராதாரவி மீது புகார் எழுந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சங்கீதா விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், நடிகர் ராதாரவி, கதிரவன் பாலு (இயக்குநர் TN பாலு மகன்), கவிதா (இயக்குநர் TN பாலு மகள்), சரவணன் (நடிகர்கள் ராஜேந்திரன்-ஸ்ரீலேகா தம்பதியின் மகன்), கோபால் ( நடிகர் பெரிய கருப்பு தேவர் மகன்), ஜெகதீஷ் (காமெடி நடிகர் அமிர்த லிங்க ம் ம க ன்) கிரிஜா ம ற்றும் பிரபு ஆகிய 8 நபர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் போலீசார் நடிகர் ராதா ரவி உட்பட 8 பேர் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 294 பி ஆபாசமாக பேசுதல், 323 சிறுகாயம் ஏற்படுத்துதல், 354 பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கோயில் சொத்துகளின் வருவாயை வசூலித்தால் பட்ஜெட்டே தாக்கல் செய்யலாம்-சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

Web Editor

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் ராஜீவ் காந்தி!

Web Editor

மழைபாதிப்பு பகுதிகளில் ’நடமாடும் மருத்துவ குழுக்கள்’- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

Arun

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading