தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் பெறவில்லை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா

தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் வாங்கி விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம்…

தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் வாங்கி விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது, அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் இந்த போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து நிதி உதவி வருவதாகவும், தூண்டுதல்பேரில்தான் போராட்டம் நடத்தப்படுவதாகவும் கூறியிருந்தார்

அதே போன்று தான் ஸ்டெர்லைட்க்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கும், வெளிநாட்டில் இருந்து நிதி உதவி வந்ததாக கூறப்படுகிறது. 100-வது நாள் போராட்டத்தின் போது மாதா கோவிலில் மணி அடித்து கூட்டம் கூட்டப்பட்டு, ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. நிச்சயம் அந்நிய தலையீடும் ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த போராட்டங்களில் மதத் தலையீடு என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

இந்த நாட்டின் வளர்ச்சியை விரும்பாத தீயசக்திகள், குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் நாட்டின் 40 சதவீத தேவையை பூர்த்தி செய்து வந்தது. தற்போது அது மூடப்பட்டதால் நாம் சீனாவிடம் இருந்து தான் காப்பர் வாங்கும் சூழ்நிலை உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநிலக் கட்சிகள் தலையீடு என்பது இல்லை. ஏனென்றால் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்தது அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஆ ராசா தான். எனவே ஆளுநருக்கு இதுகுறித்த தகவல்களும், தரவுகளும், ஆதாரங்களும் கைவசம் உள்ளன. இந்த விவகாரத்தில் ஆளுநர் பேசியது தவறு என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே. ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளோ, திமுக அமைச்சர்களோ பேசினால் அது ஸ்டாலினுக்கு தான் ஆபத்தாக முடியும்

இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று விரும்பும் திமுக கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தில் தலையிடாமல் இருந்தால் நல்லது. தமிழக ஆளுநருக்கு எதிராக, திமுக இன்றைக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நாளை ஆளுநர் இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டால் முதல்வர் என்ன செய்வார்.

அதானி விவகாரத்தில் எந்தவித முறைகேடுகளும், அரசுக்கு எந்த விதமான இழப்பும் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு எதிராக இரண்டு நாட்கள் காங்கிரஸ் பங்கு பெறாமல் முடக்கியது. அதன் பிறகு இரண்டு நாட்களில் காங்கிரஸ் வாயை மூடிக்கொண்டு பாராளுமன்றத்தில் கலந்து கொண்டது. அப்படி அந்த இரண்டு நாளில் காங்கிரஸ் மனம் மாறும் அளவிற்கு என நடந்திருக்கும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை தந்திருந்த போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும் ஏன் நேரில் வந்து சந்திக்கவில்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய எச்.ராஜா, கர்நாடகா தேர்தலுக்காக பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் இணை பொறுப்பில் அண்ணாமலை இருக்கிறார். அது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்து வருகிறது. அதனால் தான் பிரதமர் மோடி பங்கு பெற்ற நிகழ்வுகளில் அண்ணாமலையால் பங்கு பெற முடியவில்லை. இந்த தகவல் மூத்த பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொளுத்தி போடுவதற்கு வேறு எதுவும் இல்லை. அறியாமை காரணமாக பல்வேறு விதமான கருத்துக்களை பலர் வெளியிட்டு வருகின்றனர். நிலக்கரி சுரங்க விவகாரத்தில், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அண்ணாமலை கேட்டதால் தான் மத்திய அமைச்சர் நிலக்கரி சுரங்க அனுமதியை ரத்து செய்தார். அதிமுக – பாஜக உறவு நன்றாக உள்ளது. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரிடமும் பாஜக பேலன்ஸ் பண்ணி தான் நடந்து வருகிறது.

ஒன்றுபட்ட அதிமுக இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பாஜக, கூட்டணி கட்சி என்ற முறையில் அறிவுறுத்தியது. ஆனால் இது அவர்கள் முடிவு. இந்த விஷயத்தில் பாஜக தலையீடு கிடையாது என்று கூறினார்.

மேலும் கார்த்தி சிதம்பரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், சிவகங்கை நாடாளுமன்ற மக்களுக்கு மறந்து விட்டது. கார்த்திக் சிதம்பரம் வெளிநாடுகளில் அதிக அளவு சொத்து வாங்கி போட்டவர். அதனால்தான் அவர் என்னை வெளிநாட்டிற்கு கூப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். தேர்தலில் சன்னியாசம் வாங்க போகிறேன் என்று நான் கூறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் எவ்வளவு பேர் நிற்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் அனைவருக்கும் அண்ணாமலை மட்டும் பிரச்சாரம் செய்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால் தமிழிசை சௌந்தர்ராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன், இல. கணேசன் போன்ற மூத்த நிர்வாகிகள் ஆளுநர் பதவிக்கு சென்று விட்டனர். ஆகையால் அண்ணாமலைக்கு உறுதுணையாக நான் மத்த வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக தேர்தலில் விலகி இருப்பதாக தான் கூறினே தவிர, தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக சன்னியாசம் வாங்கி விட்டதாக கருத வேண்டாம். இந்துக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக இந்த எச்.ராஜா கண்டிப்பாக அரசியலில் தொடர்வேன்.

ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ளதாக கூறினார். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.