‘சம்பல் வன்முறையில் ஈடுபட்டவர்கள்’ என வைரலாகும் 4 இளைஞர்கள் அடங்கிய வீடியோ உண்மையா?

This news Fact Checked by ‘India Today’ சம்பல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என 4 இளைஞர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்லும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…

Is the video of 4 youths going viral as 'those involved in the Chambal violence' true?

This news Fact Checked by ‘India Today

சம்பல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் என 4 இளைஞர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்லும்படியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜுமா மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான மோதல்கள் துப்பாக்கிச் சூடாக வெடித்துள்ளது. மசூதி இருந்த இடத்தில் கோயில் ஒன்று இருந்ததாக சிலர் மனு தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதற்கிடையில், சம்பல் மோதலில் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சந்தேக நபர்களைக் காட்டும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. 4 இளைஞர்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்வதைக் காட்சிகள் காட்டுகின்றன. நால்வரும் கைகளைக் கட்டிக்கொண்டு பேசுவதைக் காணலாம்.

சம்பலில் கலவரம் செய்ததற்காக யோகியின் போலீசாரால் தேய்க்கப்பட்ட சுடுக்கல்”  என்ற தலைப்பில் முழு வீடியோவை கீழே பார்க்கலாம்.

இருப்பினும், இந்தியா டுடே நடத்திய விசாரணையில், பரவி வரும் வீடியோ சம்பல் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டவர் அல்ல என்று தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த நவம்பர் 17-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உணவக தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

முகநூல் பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட இணைப்பு

உண்மை சரிபார்ப்பு:

வைரலான வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உதவியுடன் சரிபார்த்தபோது, ​​நவம்பர் 22ம் தேதி யூடியூப் பக்கத்தில் இதே போன்ற காட்சியுடன் கூடிய வீடியோ ஷேர் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வீடியோவின் விளக்கத்தில் ‘யுபி பரேலி ரெஸ்டாரன்ட் கேஸ் போலீஸ் அதிரடி’ என்று கூறப்பட்டுள்ளது. ‘குறுகிய வடிவத்தில் பகிரப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டை கீழே காணலாம்.

YouTube வீடியோவில் Zee News அறிக்கை உள்ளது. உ.பி., மாநிலம் பரேலியில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த மோதல் குறித்த செய்தி இது. உணவகத்தின் உரிமையாளர் ஷிதிஜ் சக்சேனா மற்றும் அவரது ஊழியர்களை இளைஞர்கள் குழு ஒன்று தாக்கியதாகவும், இந்தச் சம்பவத்தில் சுமார் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பரேலி எஸ்பி மனுஷ் பரீக் தெரிவித்துள்ளார். பின்னர், முக்கிய வார்த்தை தேடல் நடத்தப்பட்டபோது, ​​பரேலி உணவக தாக்குதல் தொடர்பாக ஜீ நியூஸ் பகிர்ந்த அறிக்கையின் முழு வடிவம் கிடைத்தது. அதை கீழே காணலாம்.

நவம்பர் 17-ம் தேதி மாலை பரேலியின் பிரேம்நகரில் உள்ள உணவகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 4 இளைஞர்கள் சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு வந்து பில் கேட்டு சண்டை போட்டுள்ளனர் என அறிக்கைகள் கூறுகின்றன. ரிபப்ளிக் வேர்ல்ட் செய்தி அறிக்கைபடி, சம்பவம் நடந்த உடனேயே அர்ஷ் ராஷா என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உணவக மோதலில் சுமார் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பரேலி போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். X இல் காவல்துறை பகிர்ந்துள்ள வீடியோவை கீழே காணலாம். 

இதற்கிடையில், இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகித்து சுமார் 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொல்லியல் துறையினர் நவம்பர் 24 அன்று சம்பல் மசூதிக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர். கணக்கெடுப்பை அப்பகுதி மக்கள் தடுத்ததால் வன்முறை வெடித்தது.

முடிவு:

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, பரவி வரும் வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பல் மோதலில் கைது செய்யப்பட்டவர்கள் அல்ல, மாறாக நவம்பர் 17 அன்று பரேலியில் நடந்த உணவக தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது தெளிவாகிறது.

Note : This story was originally published by ‘India Today and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.