முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்வானிலை

நெல்லை பொட்டல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி தீவிரம்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொட்டல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் தேக்கம் மற்றும் அதி கனமழை காரணமாக நெல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செல்லும் பகல் நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

பின்னர் நியூஸ்7 தமிழின் தலைமைச் செய்தியாளர் சுடலைக்குமாருக்கு அவர் பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர், “எல்லா பகுதிகளில் மீட்பு பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் கேட்டுள்ளோம். சூலூரில் இருந்து உணவுப் பொட்டலங்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் தொடங்கியுள்ளன. பொட்டல் பகுதியில் குளம் உடைப்பு காரணமாக அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு இருக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து பொதுமக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

G SaravanaKumar

“எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை!” | டீப் ஃபேக் வீடியோவுக்கு எதிராக அமீர்கான் புகார்!

Web Editor

நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்-அமைச்சர் சக்கரபாணி

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading