முக்கியச் செய்திகள் இந்தியா

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்

இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலை அனுமதித்தால் இந்தியாவின் பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும் என இலங்கை அரசுக்கு இந்திய அரசு எச்சரித்தது. இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்தது. இப்போது தன்நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன உளவுக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர இலங்கை அரசு அனுமதித்திருக்கிறது.

சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் எனவும் எச்சரித்தனர். அதன் பிறகும் சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இந்தியாவுக்கு செய்த நம்பிக்கை துரோகம் எனவும் பா.ம.க நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக அவர் வெளியுட்டுள்ள அறிக்கையில் , “இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram