இந்திய கொரோனா இன்றைய நிலவரம்: தீவிரப்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 22 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1 லட்சத்து 34 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாடு முழுவதும் 22 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1 லட்சத்து 34 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 41 ஆயிரத்து 986 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 ஆயிரத்து 887 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 989-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 499 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 2 கோடியே 63 லட்சத்து 90 ஆயிரத்து 584 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் இதுவரை 22 கோடியே 10 லட்சத்து 43 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.