சுதந்திர தினம்: 15 காவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழ்நாடு அர்சு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்:-

  1. சி.ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர், கும்மிடிபூண்டி உட்கோட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
  2. நா.தமிழரசி, காவல் துணை கண்காணிப்பாளர். திருவள்ளுர் உட்கோட்டம். திருவள்ளுர் மாவட்டம்.
  3. கொ.அழகுராஜ், காவல் ஆய்வாளர். சைபர் கிரைம் காவல் நிலையம். கோவை மாநகரம்.
  4. ந.தனுசியா, காவல் துணை கண்காணிப்பாளர். ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு. குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை. திருச்சி மாநகரம்.
  5. சே.லதா. காவல் ஆய்வாளர். தனி சிறுவர் காவல் உதவி பிரிவு. கோவை மாநகரம்.
  1. வி.கோமதி. காவல்துறை உதவி தலைவர். நிர்வாகம், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம். சென்னை.
  2. மா.சித்ரா, காவல் ஆய்வாளர். கைகளத்தூர் காவல் நிலையம். பெரம்பலூர் மாவட்டம்.
  3. ரா.வினதா. காவல் ஆய்வாளர். மேல்மலையனூர் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்.
  4. திருமதி கோ.மகாலெட்சுமி. காவல் ஆய்வாளர். மாவட்ட குற்ற பதிவேட்டு கூடம். சிவகங்கை மாவட்டம்.
  5. ச.விஜயகுமார். காவல் துணை ஆணையர். மேற்கு, திருநெல்வேலி மாநகரம்.

இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகள்/சார்நிலை அலுவலர்களுக்கு 2026- ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

  1. வி.சசி மோகன், இ.கா.ப. காவல்துறை துணைத்தலைவர். திண்டுக்கல் சரகம்.
  2. தெ.சண்முக பிரியா, இ.கா.ப. காவல் கண்காணிப்பாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம். மேற்கு சரகம், சென்னை.
  3. சி.எம்.ஆர்.மணிமொழியன், துணை காவல் கண்காணிப்பாளர். தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை. சென்னை.
  4. க.மதன் மோகன், காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்). மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை. சென்னை.
  5. மு.ரவிக்குமார். தலைமை காவலர்-1618, கரூர் நகர காவல் நிலையம். கரூர் மாவட்டம்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் வெகுமதியும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.