புதுச்சேரியில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதுச்சேரியில், தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பயிலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3-ஆம் தேதி முதல் தேர்வு நடைபெற…

புதுச்சேரியில், தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பயிலும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3-ஆம் தேதி முதல் தேர்வு நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியிலும், தமிழக பாடத்திட்டதின் கீழ் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு தேதிகள் சூழ்நிலையைப் பொருத்து, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.