சேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சு

சேகுவாரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து, எதிர்த்து குரல் கொடுத்து இருப்பார் என திருமாவளன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய…

சேகுவாரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து, எதிர்த்து குரல் கொடுத்து இருப்பார் என திருமாவளன் எம்பி தெரிவித்துள்ளார்.

சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்   கட்சி மற்றும்  அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு சார்பாக  நடைபெற்ற விழாவில் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா பேத்தி எஸ்டெபானி குவேரா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விசிக தலைவர் திருமாவளன் எம்பி பேசியதாவது..

”எண்ணமெல்லாம் புரட்சி என்று சிந்திக்கும் வரம்பு கடந்த சிந்தனையாளர்தான் சேகுவாரா. இனம், மதம், மொழி கடந்து இளம் தலைமுறையினர், புரட்சி கர சக்திகளால், இடது சாரி அமைப்புகளால் நேசிக்க படுபவர் அவர்.

அவர் மகள் இங்கு வந்திருப்பது அவரே வந்தது போல உள்ளது. என் நாட்டுக்கு மட்டும் போராடுவேன் என்று சேகுவாரா நினைத்து இருந்தால் இங்கு அவரை பற்றி பேசி கொண்டு இருக்க மாட்டோம்.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர், சராசரி மருத்துவனாக என் வாழ்வை முடித்துக் கொள்ள மாட்டேன் என்று சிந்தித்தார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி கியூபா மக்களுக்கு என்றும் துணை நிற்கும்.

சேகுவாரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து, சங்பரிவார், ஆர் எஸ் எஸ்  ஐ எதிர்த்து குரல் கொடுத்து இருப்பார். சேவின் மகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். சே வின் அதே சிந்தனையை உள்வாங்கி புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல் செயல்பட்டு வருகிறார்.

ஆதிக்கம் ஒடுக்குமுறை இங்கு இருந்தாலும் ஏகாதிபத்தியம் தான். ஒரே நாடு , ஒரே தேர்தல் உள்ளிட்டவையும் ஏகாதிபத்தியம் தான் அதனை எதிர்த்து போராடுவதும் ஏகாதிபத்திய புரட்சி தான்” என திருமாளவன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.