31 C
Chennai
June 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

”சனாதனம் பற்றிய சர்ச்சையில் நான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” – இயக்குனர் வெற்றிமாறன் பேச்சு

”சனாதனம் பற்றிய சர்ச்சையில் நான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பியூர் சினிமா புத்தக விற்பனை நிலையத்தை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின் முதல் தற்சார்பு
திரைப்பட இயக்கத்தின் தலைவர் அருண்குமார் வெற்றி மாறனுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி சிறப்பித்தார். இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேசிய விருது பற்றி எனக்கு வேறு ஒரு கருத்து உள்ளது. மற்றவர்கள் பேசுவதில்
இருந்து எனக்கு வேறு விதமான கருத்து உள்ளது. நம்முடைய படத்தை ஒரு விதமான
தேர்வுக்கு நாம் அனுப்புகிறோம் என்றால், அந்த தேர்வு குழுவின் முடிவுக்கு
கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுக்கு உட்பட்டு படத்தை அனுப்புகிறோம்.

அந்தப் படத்தை அனுப்பும் போதே, அதன் முடிவு என்னவாக இருந்தாலும் நாம்
உடன்படுகிறோம் என்று கூறி தான் அனுப்புகிறோம். அந்தப் படத்துக்கு விருது
கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்பது அந்த தேர்வு குழுவின் முடிவு. அந்த முடிவு
படத்தின் தரத்தையோ, சமூகத்தின் மீதான பங்களிப்பையோ தீர்மானிப்பதில்லை.

ஜெய்பீம் படம் வந்த பிறகு அந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எந்த மாதிரியான
மாற்றங்கள் வந்திருக்கிறது என்பது இந்த படத்தின் தாக்கத்தை பொறுத்து உள்ளது. ஒரு படத்தின் தரத்தை ஒரு குறிப்பிட்ட தேர்வு குழு தீர்மானிக்க முடியாது என்பதை
என்னுடைய கருத்து.

ஒரு தேர்வு குழுவில் உள்ள ஒருவரின் விருப்பு வெறுப்பு, அந்த குழுவின் விருப்பு
வெறுப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜூரியாக
சென்றுள்ளதால் தமிழ்நாட்டிற்கு நிறைய விருது கிடைக்க வேண்டும் என்பதும்
கிடையாது. அந்தக் குழு என்ன தீர்மானிக்கிறதோ அதை பொறுத்து தான் அது. ஒரு குழு
தேர்ந்தெடுக்காததாலேயே அந்த படம் சிறந்த படம் இல்லை என்று ஆகிவிடாது.

உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயித்தது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. சனாதனம் பற்றி பேசி இருக்கக்கூடிய அமைச்சர் உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். நானும் அவருடன் நிற்கிறேன். நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன்.

விடுதலை இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு, விடுதலை இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகி விடும். கிட்டத்தட்ட பணிகள் முடிந்து விட்டது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading