அதிமுக-வை அழிக்கவும், தன்னை காப்பாற்றி கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி ரகசிய உறவு வைத்துள்ளதாக ஓபிஎஸ்-சின் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலாவின் சந்திப்பு குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்
ஆதரவாளர் வைத்திலிங்கம், எதார்த்தமாக திருமணத்திற்கு சென்றேன். அங்கு
சந்திக்க கூடிய நிலை ஏற்பட்டது. அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என விளக்கமளித்தார். அரசியல் விஷயமாக இருந்தால் நிச்சயமாக அனைவரிடமும் சொல்லிவிட்டு தான் சந்திப்போம் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓபிஎஸ் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எம்ஜிஆருடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன், தனிக்கட்சி நடத்தி வரும்
சண்முகம் உட்பட ஒதுங்கி இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த இயக்கத்தை
வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து. இதில் நாங்கள் உறுதியாக
இருக்கிறோம்.
அதில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனும் அடங்குவார்கள். ஓபிஎஸ்
மன்னிப்பு கேட்டாலும், அவரை சேர்த்துக் கொள்ள மாட்டோம் என இபிஎஸ் கூறியது
தொடர்பாக கேட்டதற்கு, ஈபிஎஸ் வார்த்தையை கடைகோடி தொண்டனும் ஏற்றுக் கொள்ள
மாட்டான். அவர் எப்படி அரசியலுக்கு வந்தார், எப்படி முதலமைச்சர் ஆக இருந்தார்,
எப்படி இந்த கட்சியை அபகரித்துக் கொண்டிருக்கிறார் என்பது கடைகோடி
தொண்டனுக்கும் தெரியும்.
நிச்சயமாக அவருடைய ஆணவப் போக்குக்கு தொண்டர்கள் தக்க
பதிலடி கொடுப்பார்கள். எங்களுக்கு ஒற்றுமை தேவை. இந்த இயக்கத்திற்கு
பாடுபட்டவர்கள், துணையாக இருந்தவர்கள், இந்த இயக்கம் வளர பாடுபட்டவர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து இந்த கட்சியை வலுப்படுத்த வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் என்ன படி ஆட்சிக்கு வர வேண்டும்.
நூறாண்டு காலம் இந்த இயக்கம் சிறப்பாக வலுவோடு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். அந்த எண்ணத்தை தான் நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம். இபிஎஸ் தன்னை காவந்து கொள்ள இந்த கட்சியை அழிக்க நினைக்கிறார். மேலும் யாருடனே அவர் ரகசிய உறவு வைத்து கொண்டு கட்சியை அழிப்பதற்கும், தன்னை காப்பாற்றி கொள்ளவும் முயற்சி செய்து வருகிறார் என வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
-இரா.நம்பிராஜன்