ஆந்திரா மாநிலம் கடப்பாவில் ஹிஜாப் அணிந்து வந்து ரியல் எஸ்டேட் வியாபாரியை ஓட ஓட பட்ட பகலில் விரட்டி படுகொலை செய்த இரண்டு பேருக்கு போலீஸ் வலை.
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் வியாபாரி சீனிவாசலு. இவர் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். சீனிவாசலு உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சியை முடித்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடப்பா நகரில் உள்ள சந்தியா சந்திப்பு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தபோது
ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய பெண்கள் போல் வந்த இரண்டு பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். யாரோ வழிமறிக்கிறார்கள் என்று கருதி அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய உடன் மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்த இரண்டு பேரும் சீனிவாசலுவை வெட்ட முயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசலு மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி
ஓடினார். அவரை விரட்டி சென்ற கொலையாளிகள் இரண்டு பேரும் பட்டப் பகலில் பலர் கண் முன் ஓட ஓட விரட்டி வெட்டி சீனிவாசலுவை கொலை செய்தனர். பள்ளி, கல்லூரி ஆகியவற்றுக்கு செல்வதற்காக அந்த வழியாக சென்று கொண்டிருந்த மாணவ மாணவிகள் இந்த கொலை சம்பவத்தை பார்த்து அலறியடித்து ஓடினர்.
இந்த படுகொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த கடப்பா போலீசார் விரைந்து சென்று
சீனிவாசலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடப்பாவில் உள்ள ரிம்ஸ்
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக சீனிவாசலு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.