திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிய நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதால் வருகின்ற 24 ஆம் தேதி
வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி திண்டுக்கல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் காலை முதல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. திடீரென்று மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் நகர்ப்புற பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக தெருக்களிலும், சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த பொதுமக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலை அளித்தது. இதேபோல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி,தாடிக்கொம்பு, வேடசந்தூர், சின்னாளப்பட்டி, ராஜக்காபட்டி, ஆகிய பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரமாக நல்ல மழை பெய்த வருகிறது. மேலும்
திண்டுக்கல் நகர்ப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூபி காமராஜ்