கடலூரில் கருடன் படம் பார்க்க குடும்பத்துடன் சென்ற 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘கருடன்’. இந்த திரைப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை பார்க்க கடலூர் “நியூ சினிமா” திரையரங்கத்திற்கு சென்ற நரிக்குறவ மக்கள் அனுமதிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் குடும்பத்துடன் இன்று படம் பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அவர்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க திரையரங்கத்தினர் மறுத்துள்ளனர். இதனையடுத்து பலமுறை அவர்கள் கேட்டும் டிக்கெட் வழங்க நிர்வாகம் மறுத்துள்ளது.
இதனையடுத்து இதுதொடர்பாக கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்களை கோட்டாட்சியரிடம் மனு அளிக்க காவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கோட்டாசியருக்காக அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.