சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம், சிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படியுங்கள் : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் வெற்றி நிச்சயம் – காங். எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை
அப்போது, மேலும் விசாரணைக்காக சந்திரபாபு நாயுடுவின் காவலை நீட்டிக்குமாறு சிஐடி நீதிமன்றத்தில் கோரியது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டது.







