ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகஞ்சம்மாள், மாராத்தாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் திங்களூரை அடுத்த நிச்சாம்பாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ கஞ்சம்மாள், மாரத்தாள் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலின் திருப்பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. கோயிலின் திருப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
கடந்த 8ம் தேதி வெள்ளிக்கிழமையன்று பவானி நதியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு கண்பதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றதயொட்டி நான்காம் கால பூஜைகள் நடைபெற்றன. மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் விமானத்தில் வேத மந்திரங்களுக்கு இடையே புனித நீர் தெளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காசி, ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் விமானத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகுவிமசையாக நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
வேந்தன்